Thursday 25 February 2010

bhagavath geetha

have already seen this
Why do you worry without cause?
Whom do you fear without reason?
Who can kill you?
The soul is neither born, nor does it die.
Whatever happened,
happened for the good;
whatever is happening,
is happening for the good;
whatever will happen,
will also happen for the good only.

You need not have any regrets for the past.
You need not worry for the future.
The present is happening...
What did you lose that you cry about?
What did you bring with you,
which you think you have lost?

What did you produce,
which you think got destroyed?
You did not bring anything,
whatever you have, you received from here.
Whatever you have given, you have given only here.
Whatever you took, you took from God.
Whatever you gave, you gave to Him.
You came empty handed,
you will leave empty handed.

What is yours today,
belonged to someone else yesterday, and
will belong to someone else the
day after tomorrow.
You are mistakenly enjoying the thought
that this is yours.
It is this false happiness that is
the cause of your sorrows.

Change is the law of the universe.
What you think of as death,
is indeed life.
In one instance you can be
a millionaire, and
in the other instance you can
be steeped
in poverty.

Yours and mine, big & small
erase these ideas from your mind.
Then everything is yours and
you belong to everyone.
This body is not yours,
neither are you of the body.
The body is made of fire, water, air, earth and
ether, and will disappear into these elements.
But the soul is permanent - so who are you?

Dedicate your being to God.
He is the one to be ultimately relied upon.
Those who know of his support are forever
free from fear, worry and sorrow.
Whatever you do,
do it as a dedication to God.
This will bring you the
tremendous experience of
joy and life-freedom forever

Thanks for Reading
and Honestly Trying to
Implement the same,
in your Day to Day Life.
Please share this presentation with your friends.


This i received through mail i like to share with you.

I THANK Mr. Naveen Kumar who have sent me this and he is also a blogger.

Wednesday 24 February 2010

நமச்சிவாய வாழ்க - பொருள்

have already seen this
" நமச்சிவாயா வாஅழ்க " இத்தொடரை கேட்க்கும்போது மனம் அடையும் பரவசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. தினமும் காலை இத்தொடரை சொல்லி அந்நாளை தொடங்கினால் அது நன்னாளாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் உண்டு. ஆனால் ஒரு சிறு சந்தேகமும் அதுனுடன் எழும் . இறைவன் நம்மை படைத்து வாழ வைக்கின்றார் ஆனால் அவரையே நாம் வாழ்க என்று கூறுவது சரியா? என. இதனை என் தந்தையிடம் கேட்டபோது அவர் எனக்கு அறிமுகம் செய்ததே "சிவபுராணம் அனுபவ உரை" என்னும் நூல். அதில் நான் தெரிந்து கொண்டதை உங்களிடம் கூற வேண்டும் என எண்ணி தான் இதை பதிவிடுகிறேன்.

நாம் வாழும் வீட்டை நாம் வெள்ளையடிப்பது வீடு வாழ வேண்டும் என்பதற்காக அல்ல நாம் அதில் வாழ வேண்டும் என்று தான்.
"வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்"  (திருச்சதகம் 16)
என்று மாணிக்க வாசகர் கூறிப்பிட்டுள்ளார்.

நாம் வாழ வேண்டும் என்ற பலனுக்காகவே இறைவனை வாழ்த்துகிறோம். இது தான் நான் சொல்ல வருவது.

தஞ்சை பெருவுடையார் என இணையத்தில் தேடிய போது கிடைத்தது.


உயிர் என்றால் என்ன?

have already seen this
நாம் சுவாசிக்கிறோமே...அந்த காற்றுதான் உயிர் என்று சொன்னால் நீருக்குள் காற்று இல்லாமலே தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து மீன் உயிர் வாழ்கிறதே...அது எப்படி?

வாகனத்தில் பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய்(?!) போன்றவற்றை ஊற்றினாலும் அது இஞ்சினில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சக்திதான் வாகனத்தை இயக்குகிறது.அதாவது எரிபொருட்கள் என்பவை சக்தி கிடைப்பதற்கான மூலப்பொருள். அவ்வளவுதான்.
அதே போல் மனிதனின் உயிருக்குத் தேவையான சக்தியைக் கொடுக்க காற்று, நீர் போன்றவை பயன்படுகிறது.மனிதன் உட்பட பல உயிரினங்களுக்கு காற்றும், மீன் போன்ற பல உயிரினங்களுக்கு தண்ணீரும் ஆக்சிஜனை வழங்குகின்றன.

வாகனத்தில் எரிபொருள் எரிக்கப்படும்போது கிடைக்கும் உந்து சக்தி எப்படி வாகனத்தின் சக்கரத்தை சுழலச் செய்கிறதோ அதே போல் ஆக்சிஜன் நாம் உண்ணும் உணவுகளை எரித்து கலோரிகளை சக்தியாக மாற்ற உதவுகிறது.அதாவது நம் உடலும் ஒரு அடுப்பு அல்லது வாகன இஞ்சின் என்றுதான் சொல்லவேண்டும்.

நம் உடல் என்ற அடுப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருந்தால் உடல் அழுகாமல் இருக்கிறது. உயிர் போய்விட்டது என்றால் சில்லிட்டுவிட்டது என்று சொல்கிறோம். அப்போது சாதாரணமாக உள்ள வெப்ப நிலையை விட நம் உடல் வெப்ப நிலை அதிகம் என்பதால்தான் உயிர் பிரிந்து அந்த அடுப்பு அணைந்ததும் உடல் அழுகத் தொடங்கிவிடுகிறது.

பனிக்கட்டி தொட்டுப்பார்க்க சில்லென்று இருந்தாலும் சராசரி வெப்ப நிலையை விட அது மிகவும் உஷ்ணமானது.அதனால்தான் ஐஸ் பெட்டியில் வைத்த உடல் கெட்டுப் போவதில்லை.உணவுப்பொருள் தன் ருசியை இழந்தாலும் வீணாவதில்லை.அதாவது ஒரு பொருள் அல்லது மனிதனை, மற்ற உயிர்களை இல்லை அந்த உடல்களை வீணாகாமல் வைத்திருக்க சராசரியைத் தாண்டிய வெப்ப நிலை தேவைப்படுகிறது. அப்போது அக்னிதான் உயிரா?

(ஆணின் உடலில் உயிரணுக்களை உற்பத்தி செய்யும் இடம் வெப்பமான உடலை விட்டு வெளியே சராசரி சீதோஷ்ண நிலையில் அமைந்திருப்பதற்கும் இப்போதுதான் அர்த்தம் புரிகிறது.)
******

2001ம் ஆண்டு தினமலர்-வாரமலரின் வேலூர், திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகிய பதிப்புகளில் இந்திராசௌந்தர்ராஜன் எழுதிய தினம் ஒரு உயிர் என்ற ஐம்பது வார தொடர்கதையை நான் மிகவும் ஆர்வமுடன் படித்தேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் டைரிக்குறிப்பாக சில தகவல்கள் இடம்பெற்றன.அதில்தான் உயிர் என்றால் அக்னி என்று சித்தராக மாறும் அரங்கநாத தேவரின் கூற்றாக இடம்பெற்றிருந்தது. அறிவியல் ரீதியாக பார்த்தாலும் இது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.இதை அடிப்படையாக வைத்துதான் இந்த கட்டுரையை எழுதினேன்.

அந்த தொடர்கதை திருமகள் நிலையத்தின் வெளியீடாக வந்த பிறகும் நூலகத்தில் பல முறை படித்திருக்கிறேன்.ஐம்பது துணுக்குகளில் இதுதான் என் மனதில் மிக ஆழமாக பதிந்த செய்தி.

அதன் பிறகு சிவலிங்கம் பற்றிய அரிய தகவல்களுடன் சிவம் என்ற கதையும் அடுத்த ஒரு ஆண்டுக்கு தொடராக வெளிவந்தது.அதையும் விடாமல் வாசித்திருக்கிறேன்.பாலகுமாரனின் உடையார் என்ற பிரமாண்ட நாவலின் எல்லா தொகுப்புகளையும் வாசிக்க பொன்னியின் செல்வன் போலவே சிவமும் ஒரு காரணம்.

இப்போது கூட இந்திராசௌந்தர்ராஜன் மேலே சொன்ன தினமலர்-வாரமலரின் ஆறு பதிப்புகளில் மாயமாய் சிலர் என்ற தொடர்கதையை எழுதி வருகிறார்.ஆனால் அது தினம் ஒரு உயிர், சிவம் நாவல்கள் போல என்னைப் புரட்டிப்போடவில்லை.நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனின் ஓவியங்களுடன் இந்த தொடர் மிகவும் அதிகமான விளம்பரத்துடன் தொடங்கியது.

ஓவர் பில்ட் அப் கொடுத்தால் சினிமாவாக இருந்தாலும் தொடர்கதையாக இருந்தாலும் மக்கள் மனதை கவரும் அளவுக்கு விஷயம் இருக்காதோ?
******

Tuesday 23 February 2010

சகுனத்தைப்பற்றி சில தகவல்கள்...

have already seen this
சகுனத்தைப்பற்றிய அந்த பெண்மணியின் ஆய்வு, கால நேரம் என்றால் என்ன என்பதை உணர்த்துவதாக இருந்தது.உண்மையில் காலம் என்பது தினந்தோறும் இரவு பகலாக விரிந்து கிடக்கிறது.இதில் பூமியில் மட்டும்தான் பௌர்ணமி, அமாவாசை போன்ற வானியல் நிகழ்வுகளை உணர முடியும்.அதை வைத்தே ஒவ்வொரு நாளும் இரவுப்பொழுதில் வித்தியாசங்களையும் உணர முடியும்.இந்த வித்தியாசங்களை வைத்தே ஒவ்வொரு நாளுக்கும் அடையாளமாகப் பெயர்கள் இடப்பட்டன.இதில் இருந்து தான் திதி, ஹோரை, கிழமை, தேதி என்று சகலமும் அறிய வந்தது.இதனால் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஒரு நாளைக்கூட நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் ஒரு நிலை இன்று உள்ளது.அந்த நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், அன்றைய தேதி, அன்றைய கிழமை, அன்றைய திதி என்று சகலத்தையும் கூறிவிட முடியும். ஒரு படி மேலே போய் அன்றைக்கு என்ன நட்சத்திரம், அது எவ்வளவு நாழிகை நேரம் உள்ளது என்பதை கூட கூறிவிட முடியும்.இது அவ்வளவுமே மனிதன் தன் வான சாஸ்திர அறிவால் கண்டறிந்த உண்மைகள்.சுருக்கமாக கூறுவதானால் இது மாயமோ, மந்திரமோ அல்ல.இது கணக்கு!
இந்தக் கணக்குகள்தான் சகுனங்களும் செயல்படுகின்றன.ஒரு வீட்டின் ஈசான்ய பாகத்தில் காகம் ஒன்று இடைவிடாது கரைந்தால், அந்த வீட்டுக்காரருக்கு ஒரு பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வருகிறது என்பது உட்பொருள்.கொல்லையில் காகம் கரைந்தால் உறவினர்கள் வருகின்றனர்.வெளியேறும்போது பூனை குறுக்கே போனால் அது எந்த பக்கத்தில் இருந்து எந்த பக்கம் செல்கிறது என்பதை வைத்து அதனுள் ஒரு செய்தி உள்ளது.

அதேபோலத்தான் எதிரில் ஒற்றை பிராமணன் வருவது, சுமங்கலி வருவது.கர்ப்பவதி வருவது, முடவன் வருவது என்று ஒவ்வொன்றும்...இவை அவ்வளவும் ஒரு செய்தி. இதை உணர அந்த கால நேர கணக்கு தெரிய வேண்டும். அது தெரிந்தால் அதைக்கொண்டு சகுனக்காட்சிகளை கூட்டிக் கழித்து நடக்க போவதை முன்பே கூறிவிடலாம்.

மந்திரி வருவதற்கு முன்னால் சைரன் கார் வருவது போன்றது இந்த சகுனங்கள்.ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பாடுகளுக்கு ஏற்ப அதன் தொடர்புகளுக்கு ஏற்ப, காலம் அது தொடர்பான செய்திகளைக் கூறிக் கொண்டுதான் உள்ளது.

ஆனால் அதை தெரிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் அறிவுதான் மனிதனிடம் குறைவாக உள்ளது.அப்பெண்மணியோ சில சகுனங்களை பரீட்சை செய்து பார்த்து உண்மையை அறிந்து வாயைப் பிளந்து விட்டார்.

ஆச்சர்யங்கள் தொடரும்...

Monday 22 February 2010

விரதம் பற்றி சில தகவல்கள்...

have already seen this
நமது கலாச்சாரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்க வழக்கத்துடன் விரதம் இருக்கும் ஒரு பழக்கமும் வழக்கத்தில் உள்ளது.ஏகாதசி விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி விரதம், அமாவாசை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று அடுக்கடுக்காக விரதங்கள்.இந்த விரதங்கள் எதற்காக? இதனால் என்ன நன்மை? என்றெல்லாம் ஆராயப்போனால் அதிசயிக்கவைக்கும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.விரதத்துக்கு இவ்வளவு மகிமையா என்று அவை எண்ண வைக்கின்றன.
"ம்"என்பது, ஒன்றில் இருந்து விடுபடுவதை குறிக்கும் சப்தம்.இதோடு "த" சேர்ந்து "தம்" என ஆகும்போது அது மிக வேகமாக நடைபெறுவதைக் குறிக்கிறது.இந்த வேகம் மிக மிக வேகமெடுக்கும்போது 'ரதம்' ஆகிறது. இந்த ரதத்தோடு 'வி' சேரும்போது வினை ஏற்படுகிறது. அது என்ன வினை?

உடம்பில் ரத்தம் ஓடியபடி உள்ளது.

இதயம் துடித்தபடியே உள்ளது.இந்த இரண்டும் ஒரு சீரான வேகத்தில் செயல்பட்டபடி உள்ளன.இந்த வேகத்தைக் கூட்டிக் குறைப்பவைதான் எண்ணங்கள்.

அதிர்ச்சிகரமான செய்திகள், அச்சமூட்டும் அனுபவங்கள், இதயத்துடிப்பை அதிகரிக்கும்; இரத்த ஓட்டத்தையும் வேகப்படுத்தும். இதனைத்தான் இரத்த அழுத்தம் என்கிறோம்.விரதகாலத்தில் அதாவது எதுவும் உண்ணாமல் மனதை இறைசிந்தனையில் மட்டுமே வைத்துக்கொள்ளும்போது ஜீரண உறுப்புகள், சுரப்பிகள் ஓய்வு பெறுகின்றன.இதயத்துடிப்பும் சீரான வேகம் அடைகிறது.இரத்த ஓட்டத்திலும் உணவுப் பொருள்களின் சக்திப்பொருள்கள் கலப்பது நிகழாமல் இரத்தம் தன் சேமிப்பில் உள்ள சக்தி ஆதாரங்களை எடுத்துச் செயல்படுகிறது.இதனால் உடம்பின் நாடிகளில் கூட சீரான தன்மை ஏற்படுகிறது.விரதத்திற்கு பின்னாலே இப்படி அடுக்கடுக்கான நன்மைகள் இருப்பதை அந்த வெளிநாட்டுப்  பெண்மணி கண்டறிந்து பெரிதும் வியந்தார்.

விரதத்துக்கும் பட்டினிக்கும் நிறைய வேற்றுமை உள்ளது.பட்டினியின் போது மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அதனால் பாதிப்பு உருவாகும்.ஆனால் விரதம் என்பது மன பலத்தால் மன நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது.இப்படிப்பட்ட விரதத்தையும் நினைத்த நேரத்தில் செயல்படுத்த நமது முன்னோர்கள் அனுமதிக்கவில்லை.அதற்கென்று சரியான கால நேரங்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள்.இதை எல்லாம் அறிந்த அந்த பெண்மணியை அடுத்து கவர்ந்த மிக முக்கியமான விஷயம்தான் சகுனங்கள்.

ஆச்சர்யங்கள் தொடரும்...

Sunday 21 February 2010

எண்ணெய்க்குளியலில் இவ்வளவு விஷயங்களா...

have already seen this
ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் தாம்பத்ய சுகத்தில் ஈடுபடும்போது ஒரு குளிர்ந்த உடல் ஒரு வெப்ப உடல் என்கிற சேர்க்கை நிகழ்கிறது.
அந்த வெளிநாட்டுப்பெண்மணியின் ஆய்வில் அடுத்தடுத்த கட்டங்கள் மிக சுவாரஸ்யமானவை. அதில் பெண்கள் செவ்வாய், வெள்ளியில் எண்ணெய் தேய்த்து தலைமுழுக்கு போடுவதும் ஒன்று. நல்லெண்ணெயில் ஊறிக் குளிப்பது என்பதே அந்த பெண்ணுக்கு ஓர் அதிசயமான விஷயமாகத்தான் தோன்றியது.

அந்த பெண்ணே குளித்தும் பார்த்தபோதுதான் அதன் சுகமும் விளங்கியது.அன்றெல்லாம் மிக ஆழ்ந்த உறக்கம்.கண்களிலும் அப்படி ஒரு குளிர்ச்சி.ஜலதோஷம் கூட பிடித்துக்கொண்டது.பிறகுதான் அந்த பெண்மணிக்கு பல புதிய செய்திகள் தெரிய வந்தன.வீட்டு வேலைகளால் உண்டாகும் உஷ்ணத்தை-குறிப்பாக அடுப்படியில் விறகு அடுப்பு அருகே அமர்ந்து சமைக்கும்போது உருவாகும் வெப்பத்தை தணிக்கத்தான் எண்ணெய்க்குளியல்.எல்லாவற்றுக்கும் மேலாக உடம்பின் ரோமக்கால்கள் நல்லெண்ணெயால் நெகிழ்ந்து போகின்றன.தோலிலும் பளபளப்பு கூடுகிறது.உடம்பு வெளியிடும் வெப்பம் குறைகிறது.

இந்த எண்ணெய்க்குளியலையும் செவ்வாய், வெள்ளி என்று வைத்ததன் பின்னே ஒரு நுட்பமான காரணம் இருந்தது.பெண்களுக்கு செவ்வாய், வெள்ளி என்றால்-ஆண்களுக்கு புதனும் சனியும்.இதனால் ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் தாம்பத்ய சுகத்தில் ஈடுபடும்போது ஒரு குளிர்ந்த உடல் ஒரு வெப்ப உடல் என்கிற சேர்க்கை நிகழ்கிறது. இது கருச்சேர்க்கைக்கும் பெரிதும் உதவுகிறது.இந்த எண்ணெய்க் குளியலை அடுத்து பொட்டு வைத்துக் கொள்ளும் அந்த கலாச்சாரம்.

புருவ மையத்தில் மஞ்சள் மற்றும் செந்தூரம் கலந்து உருவாக்கப்பட்ட குங்குமம் இரு விதங்களில் செயலாற்றுகிறது.ஒரு பெண்ணைப் பார்ப்பவரின் பார்வைத் தாக்கத்தை குங்குமப்பொட்டு சிதற அடிக்கிறது.கழுத்து உடம்பில் புருவ மையத்தில்தான் ஆக்ஞா சக்கரம் உள்ளது.அது அங்கு தேங்கும் துர்நீரை உறிஞ்சி ஆவியாக்கி அந்த பாகத்தை பாதுகாக்கிறது.இதனால் பார்வைக்கோளாறு தவிர்க்கப்படுவதோடு நுட்பமாக சிந்திக்கும் ஆற்றலும் வளர்கிறது.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு நுட்பமான காரணம்!

ஆச்சர்யங்கள் தொடரும்...

Saturday 20 February 2010

சமைக்கும் முறை தந்த ஆச்சர்யம்.

have already seen this
அந்தப்பெண்மணியை வியப்படைய வைத்த அடுத்த விஷயம் நமது குடும்பப்பெண்கள் வீட்டி சமைக்கும் முறை. குறிப்பாக ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி அதை வழித்தெடுப்பதும், மொத்த வீட்டையும் கூட்டுவதும், பின் கொல்லைப் புறத்தில் உள்ள கிணற்றின் சகடையில் நீர் இறைப்பதும், துணி துவைப்பதும் என்கின்ற அடுக்கடுக்கான செயல்பாடுகள்...இவை ஒவ்வொன்றுமே ஒரு வித உடற்பயிற்சி.
துணி துவைப்பது கைக்கும் விரல்களுக்கும் பயிற்சி என்றால், தண்ணீர் இழுப்பது மூச்சுப்பயிற்சியாக அமைகிறது.வீடு கூட்டுவது இடுப்புக்கு பயிற்சியளிக்கிறது.இவ்வளவையும் செய்துவிட்டு இறுதியில் பூஜை அறையில் நெய்விளக்கேற்றி வழிபடுவது என்பதுதான் உச்சக்கட்டம்.

நெய்விளக்கு, நைட்ரஜன் ஆக்சைட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது  பரவும் இடத்தில் தவறான அணுக்கதிர் வீச்சுக்கு இடமேயில்லை.இப்படிப்பட்ட பெண்களின் கர்ப்பப்பை மிகவும் வலிமையுடையதாகவும் செறிவோடும் இருப்பதுதான் சிறப்பு.இதனால் இவர்களின் கருப்பைகளில் உருவாகும் குடும்ப வாரிசுகளின் ஆரோக்கியத்தில் ஒரு குறையும் இருக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட பணிகள் எதுவும் செய்யாமல் டி.வி.பார்ப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்றாகி விட்ட பெண்களின் கருப்பைகள், மயோமா என்னும் கட்டிக்கு இடமளித்து இரத்தப் பெருக்கையும் உருவாக்கி ஒரு கட்டத்தில் கர்ப்பப்பையையே வெட்டி எடுத்துவிட வேண்டி வந்து விடுகிறது.

பெண்மையின் ஆதார சக்தியும் ஆக்க சக்தியும் கர்ப்பப்பையின் சரியான செயல்பாட்டில்தான் உள்ளது.அதன் ஆரோக்கியத்தை மையமாக வைத்தே அவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்திய நம் முன்னோர்களின் ஞானம், அந்த வெளி நாட்டுப்பெண்மணியை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆச்சர்யங்கள் தொடரும்.
******
படத்தில் உள்ள ஆலயம், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நம்நந்தியடிகள் வாழ்வில் சிவபெருமானின் திருவிளையாடல் காரணமாக உருவானது.திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் திருப்பணி நடைபெறுவதற்காக நான்காவது வாரம், ஜனவரி 2010ல் பாலஸ்தாபனம் நடைபெற்றது.

ஆலயத்தைப் பற்றி மேலும் சில தகவல்களுக்கு இங்கே அமுக்கவும்.

Friday 19 February 2010

இந்திய பாரம்பரியம்-கோலம் தந்த ஆச்சர்யம்

have already seen this
வெளிநாட்டைச் சேர்ந்தவர் அந்தப்பெண்மணி.உலகைச்சுற்றி வருவதும், பல நாடு, பல மொழி பலவித கலாச்சாரங்களை அறிந்து கொள்வதும் அவருக்கு விருப்பமான செயல். இந்தியா வந்த அந்த பெண்மணி நமது நாட்டின் பன்மொழி கலாச்சாரத்தைப் பார்த்து முதலில் அதிர்ந்தார்.பிறகு ஆச்சர்யப்பட்டார். அனைத்திற்கும் மேலாக இந்திய மண்ணின் ஆன்மீகச் சிறப்பை அவரால் நுட்பமாகவே உணர முடிந்தது. பலவித புராணங்கள், இதிகாசங்கள் என்று ஏராளமான இலக்கியங்கள் மண்டிக்கிடப்பதை பார்த்தவருக்குள் ஒரு உண்மை தெளிவாகப்புலனாயிற்று.

எவ்வளவு நீண்ட ஒரு பாரம்பரியம் இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும் என்பதுதான் அது!நீண்ட பாரம்பரியம் உள்ள ஓர் இடத்தில் நிச்சயம் ஒரு நல்ல தெளிவிருக்கும்.ஏராளமான சான்றோர் பெருமக்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றி மறைந்திருப்பார்கள்.அவர்களின் வாழ்க்கைப்பதிவுகள் வழிகாட்டிகளாக இருக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிட்டத்தட்ட முதல் மனிதன் வாழ்ந்த அந்த நாள் வரை கூட இவர்களைக்கொண்டே எட்டிப்பார்க்க நம்மால் இயலக்கூடும்.

அந்தப்பெண்மணி மிகச் சரியாகவே நமது கலாச்சார சிறப்புகளை ஆராயத் தொடங்கினார்.அவருக்கு பிரமிப்புகளும் ஏற்பட ஆரம்பித்தன!
******
அந்த வெளிநாட்டுப் பெண்மணி முதலில் வியந்தது, நமது வீடுகளின் முன்னால் தினமும் காலையிலும் மாலையிலும் நீர் தெளித்து கோலமிடும் பழக்கத்தைதான்.அது ஒரு மங்கலச் செயலாக அவருக்கு கூறப்பட்டது.ஆனால், கோலமிடுவதில் மங்கலம் மட்டுமல்ல.பெண்களுக்கான உடல்ஆரோக்கியம் மற்றும் எதையும் திட்டமிட்டு செய்யும் சாதுர்யம் இவை ஒளிந்திருப்பதை அவருக்கு விளக்கியபோது அவர் வியப்பின் உச்சிக்கே போனார்.
வாசலில் சாணி தெளித்து சுத்தம் செய்வதால் கிருமிகள் அண்டுவதில்லை.அதன் மேல் சூரிய ஒளி படும்போது ஜீவ வாயுக்கள் உருவாகின்றன.அதோடு அரிசி மாவால் புள்ளிகள் வைத்து கோலமிடுவது கணக்கு போடுவது போல ஒரு செயல்.அது மறைமுகமாக திட்டமிட்டு எதைச் செய்தாலும் அது அழகாக முடிந்து மனதுக்கும் நிறைவைத்தரும் என்கிற ஓர் உண்மையை ஆழ்மனதில் புதைக்கிறது.அனைத்திற்கும் மேலாக கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் ஒன்று கூடி கோலமாவை எடுத்து வளைந்து நெளிந்து கோலம் போடும்போது உடம்பும் பலமுறை குனிந்து நிமிர்ந்திட அதுவே மறைமுகமாக ஒரு யோகாசனப்பயிற்சி போல அமைந்துவிடுகிறது.

இறுதியாக கோலமாவுத் துணுக்குகளை மறு தினத்துக்குள் பல எறும்புகள் தங்களுக்கான உணவாக கருதி எடுத்துச் சென்று விடுவதால் வீட்டு வாசல் என்பது கலா ரூபம், சுகாதாரம், உயிர்களுக்கு உதவும் அன்னக்கூடம் என்று மூன்று விதத்தில் சிறப்படைகிறது.வீட்டு வாசலிலேயே இவ்வளவு சிறப்புகள் அமைந்தால் வீட்டினுள் எவ்வளவு சிறப்புகள் இருக்கும்?

ஆச்சர்யங்கள் தொடரும்...
******
படங்களில்  இருக்கும் கோலங்களை வரைந்த சகோதரி, திருப்பாம்புரம் கோயிலில் அர்ச்சகராக இருக்கும் என் நண்பர் வி.ஜி.எஸ் அவர்களின்  மனைவி.

Thursday 18 February 2010

நான் படித்த நாவலில் இருந்து சில தகவல்கள்.

have already seen this
 (சிவம் பற்றிய புராண விஷயங்கள் மிகவும் அதிகம் என்பது நாம் அறிந்த விஷயம்தான். இதில் பல விஷயங்களை நாம்  உறுதியாக  புறம் தள்ள முடியாத அளவுக்கு அறிவியல் உண்மைகளை உள்ளடக்கி இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.அதனால் நான் படித்த சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இது என் சொந்த கருத்து அல்ல.விருப்பமிருப்பவர்கள் தொடருங்கள். இதில் உடன்பாடு இல்லாதவர்கள் அவர்கள் வழியைப் பார்க்கலாம். இறை நம்பிக்கை அல்லது தன்னம்பிக்கை இதில் ஏதாவது ஒன்றுதான் அனைவரையும் இந்த உலகில் எதிர்நீச்சல் போட வைக்கிறது என்பது என் எண்ணம்.)
 ******
சிவப் பிரசாதங்களில் விபூதியை அடுத்து உன்னதமாக கருதப்படுவது வில்வம். விஸ்வம் என்றால் புறத்தில் பெரிதாகத் தோன்றுதல் என்பது பொருள்.வில்வம் என்றால் அகத்தில் பெரிதாகத் தோன்றுவதாகும். வில்வம் என்பது தாவரவகையில் மரத்தில் இருந்து கிட்டும் மூலிகை ரகமாகும்.வில்வ இலைகள் மிகவும் குளிர்ச்சியை அளிப்பவை.

பொதுவில் சிவாலயங்களில் லிங்க சொரூபங்களுக்கு அர்ச்சனை செய்யும்போதும், பிற நேரங்களிலும் ருத்ரம் முதலிய மந்திரங்கள் கூறப்படுவது சகஜம்.சிவத்தின் நோக்கமே தவறானவர்களை அழிப்பது என்பதே.அத்ற்கே அந்த ஈசன் சதா சர்வ காலமும் கயிலையில் தியானத்தில் இருக்கிறான்.அவனது நடனம் உலக இயக்கத்தையும், அவனது தியானம் அந்த இயக்கத்திற்கான பலத்தையும் குறிப்பதாகும்.இப்படி இயங்கியும் இயக்கியும் செயல்படும் சிவமானது அக்னி சொரூபமானது.

எனவே கருவறைகளில் அது துதிக்கப்படும்போது வெப்பம் மிகுதியாகும்.மிகுந்த வெப்பத்தை உறிஞ்சி சீதோஷ்ண நிலையைச் சமச்சீர் செய்வது வில்வம்.அத்தோடு இதை உண்ணும்போது உள்ளுக்குள்ளும் குளிர்ச்சியை வில்வம் உருவாக்குகிறது.எனவேதான் சிவாலயங்களில் வில்வம் அர்ச்சனைக்குப் பெரிதும் உகந்ததாகக் கருதப்படுகிறது.

வில்வமரங்கள் மிகுதியாக உள்ள காடும்,குளிர்ந்த பனிமலையும் ஒன்றாகும்!

(தஞ்சை பெரிய கோவில் புகைப்படத்தை இங்கே நான் வைத்திருக்க காரணம் இது மதச் சின்னம் என்ற எல்லையைக் கடந்து தமிழனின் திறமைக்கு சான்றாக எனக்குத் தோன்றுகிறது.)

Saturday 13 February 2010

சிவ என்னும் வார்த்தையின் மகிமை

have already seen this
                                                       உ
                                               நம சிவாய
நம சிவாய :

இதில் முதல் எழுத்து ' சி ' இதனை பார்த்தால் ச் + இ . இதில் ச 'சரண்' என்னும் புகலிடத்தை குறிக்கும் ' இ '  என்பது ' இவன் ' என்பதை குறிக்கின்றது. 'சிவனிடத்தில் சரணடைதல் வேண்டும்' என்பதை ' சி ' என்னும் எழுத்து உணர்த்துகின்றது . அது போல் வ என்பது 'உயிர் ' என்ற பொருளில் வருகிறது.

அதாவது சிவ பெருமானிடத்தில் சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கும் என்பது பொருள்



நன்றி:  தினமணி

Thursday 11 February 2010

சிவாய நம ஓம்

have already seen this
சிவாய நம ஓம்
எந்நாளும் சிவ நாமம் போற்ற ஆசிர்வாதிப்பாயாக எம்பெருமானே நம சிவாய